Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

செங்கல்பட்டு அருகே கவனத்தை திசை திருப்பி பெண்ணிடம் இருந்து ரூ.1.30 லட்சம் வழிப்பறி

செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் வன்னியர் நகர், கொள்ளை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சன்னியாசி. இவரது மனைவி தனலட்சுமி (25). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள கூட்டுறவு வங்கியில்தனது நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கிஉள்ளார்.

பின்னர் வீடு திரும்புவதற்காக இருசக்கர வாகனம் அருகே வந்தபோது, அவ்வழியே வந்த ஒருவர் கீழே பணம் கிடப்பதாக தனலட்சுமியிடம் கூறினார். அவர் கீழே பணத்தைத் தேடியபோது, மர்ம நபர், இருசக்கர வாகன சீட்டில் இருந்த பையை கைப்பற்றி தப்பிச் சென்றார்.

அதில் நகை அடகு வைத்து பெற்ற பணம், வங்கி பாஸ்புக், அடகு ரசீது இருந்ததாக காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. மறைமலை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ரூ.10 ஆயிரம் திருட்டு

மாங்காட்டை அடுத்த வடக்கு மலையம்பாக்கம், ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (40), காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மகளிர் குழுவுக்கு கொடுக்க வேண்டிய பணம், ரூ.10 ஆயிரத்தை குன்றத்தூரில் உள்ள வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு குன்றத்தூர், பஜார் ரோட்டில் உள்ள கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டு திரும்பிவந்து பார்த்தபோது, சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x