திண்டுக்கல்லில் மனைவி கொலை வழக்கில் கணவர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்லில் மனைவி கொலை வழக்கில் கணவர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

திண்டுக்கல் மேட்டுப்பட்டி சவேரியார் தெருவைச் சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் ஜெரால்டு(41). இவரது மனைவி வனிதா(26). இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் 2016 ஜூலை மாதம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெரால்டு கத்தரிக்கோலால் வனிதாவை குத்திக் கொலை செய்தார். இதற்கு அவரது தங்கை ப்ளோரா(38) உடந்தையாக இருந்துள்ளார்.

இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெரால்டு, ப்ளோரா ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி புருஷோத்தமன், மனைவியைக் கொலை செய்த ஜெரால்டு, உதவிய ப்ளோரா ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in