பின்னலாடை பணியாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பின்னலாடை பணியாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
Updated on
1 min read

திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (33). அதே பகுதியில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 16-ம் தேதி இரவு நண்பர்கள் ஜீவா (27), ரஞ்சித்குமாருடன் (29) அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்களான கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த டி.ஆனந்த் (28), பி.கார்த்தி (40), எஸ்.கண்ணன் (28) ஆகியோர் அங்கு சாலையோர கடையில் இருந்த கரும்புகளை எடுத்து சாப்பிட்டனர். ரவிக்குமார், ஜீவா உள்ளிட்டோர் அது குறித்து கேள்வியெழுப்பினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் கத்தியால் குத்தப்பட்ட ரவிக்குமார் 19-ம் தேதி காலை உயிரிழந்தார். வடக்கு காவல் நிலைய போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கண்ணனை ஏற்கெனவே கைது செய்த நிலையில், நேற்று கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in