தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் எம்.பி, எம்எல்ஏ ஆய்வு

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் எம்.பி, எம்எல்ஏ ஆய்வு
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை தஞ்சை தொகுதி எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பழநிமாணிக்கம் கூறியது: நிவர் மற்றும் புரெவி புயலில் சேதமடைந்த பயிர்களை விவ சாயிகள் பெரும் பொருட்செலவில் மீட்டெடுத்து, அறுவடை நிலைக்கு கொண்டுவந்த நிலையில், தொடர் மழை பெய்து முழுமையாக நெற்பயிர்களை வீணடித்து விட்டது. எனவே, பாதிப்பு குறித்து அரசு மறு கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடில் லாமல் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in