திருவள்ளூரில் தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ மாவட்ட ஆட்சியர் அதிரடி

திருவள்ளூரில் தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ மாவட்ட ஆட்சியர் அதிரடி
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டை சேர்ந்தவர் ராகவன். இவரது விந்து பை வீக்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருநின்றவூரில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் செலுத்தப்பட்டது. கூடுதலாக ரூ.23,500 செலுத்த கட்டாயப்படுத்தி ராகவனை 3 நாட்கள் மருத்துவமனையில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், உடல்நிலை மோசமானதால், ராகவன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரையடுத்து கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் ராணி விசாரணை நடத்தியதில் தனியார் மருத்துவமனை, கூடுதல் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தியதும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகவனுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளாததும்தெரியவந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்' வைக்க திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in