புதிய வீடு கட்டித்தரக் கோரி இருளர் இன மக்கள் மனு

புதிய வீடு கட்டித்தரக் கோரி இருளர் இன மக்கள்  மனு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்பதி இருளர் காலனியைச் சேர்ந்த மக்கள், மத்தூர் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் மகபூப்பாஷா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் மத்தூர்பதி இருளர் காலனியில் கடந்த 75 வருடங்களாக வசித்து வருகிறோம்.

எங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தது. அது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அந்த வீடுகளை இடித்துவிட்டு, புதியதாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in