சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் நெல்லையில் ஆர்ப்பாட்டம்

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பல்நோக்கு மருத்துவமனை அருகே பொதுமக்கள் சேவைக்காக ஆட்டோ நிறுத்தம், பெயர் பலகை மற்றும் சங்க கொடி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன்முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முருகன், மண்டலத் தலைவர் சுடலைராஜ், மாநிலக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர் மாவட்டம் காமராஜர் நகரை சேர்ந்த ஜெயராம்- சித்ரா தம்பதியின் மகன்ஹரிஹரனை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகமுன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் எஸ். செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in