Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கடலூர்/கள்ளக்குறிச்சி

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிமுக சார்பில் முன்னாள்முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டப் பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்குஅதிமுக நகர செயலாளர் குமரன்தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடலூர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காட்டுமன்னார்கோவில் ராஜேந்திரசோழகனில் உள்ள எம்ஜிஆர்சிலைக்கு அதிமுக அமைப்புச்செயலாளரும், காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏவுமான என்.முருகுமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புவனகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்குமாவட்ட செயலாளர் ஏ. அருண் மொழிதேவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக மகளிர் அணி செயலாளர் சத்யா பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை கட்சியினர் கொண்டாடினர்.

புதுச்சேரி முதல்வர் மாலை அணிவிப்பு

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அரசுசார்பில் முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

என்ஆர் காங்கிரஸ் சார்பில் அதன்தலைவர் ரங்கசாமி, கிழக்கு மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x