மின்சாரம் தாக்கி வங்கி அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி வங்கி அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

சிதம்பரம் அருகே உள்ள பெருங் காளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரு மகன் சத்தியசீலன்( 27). இவர் சென்னையில் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். நேற்றுஅவர் வீட்டில் டிவியை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட்டுள் ளார். எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனை வீட்டின்வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது உறவி னர் பால்சாமி (60) என்பவர் சத்தியசீலனை தூக்கியுள்ளார். அவரையும் மின்சாரம் தாக்கியுள் ளது. அவரும் மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர் கள் 2 பேரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், 2 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in