சிறப்பு ரயிலில் திடீர் தீ விபத்து

சிறப்பு ரயிலில் திடீர் தீ விபத்து
Updated on
1 min read

பொங்கலையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாகர் கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4.20 மணியளவில் திருநெல்வேலி அருகே தாழையூத்து ரயில் நிலையத்திலிருந்து கங்கைகொண்டான் செல்லும் வழித்தட த்தில் சென்ற போது திடீரென்று இன்ஜினில் இருந்து 9-வது பெட்டியில் பிரேக் கட்டை உராய்வு காரணமாக தீப்பிடித்து புகை கிளம்பியது. இதையடுத்து ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். ரயிலில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் உடனே தீ அணைக்கப்பட்டது. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை.

தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் மாலை 4.50 மணியளவில் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in