Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையம் மூலம் ‘உதயம்’ சான்றிதழ் பெறலாம்

திருவள்ளூர் ஆட்சியரின் செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக, தற்போது மத்திய அரசு உதயம் சான்றிதழை அறிமுகம் செய்துள்ளது.

2020 ஜுன் 30-ம் தேதிக்கு முன்புபெறப்பட்ட உத்யோக் ஆதார் பத்திரம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது. எனவே, அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் www.udyamregistration.gov.in என்ற இணையதளம் மூலம் வரும்மார்ச் 31-க்குள் உதயம் சான்றிதழை இணையம் வழியே பதிவுசெய்து கொள்ளலாம். தகவலுக்கு பொதுமேலாளர், மாவட்டதொழில் மையம், சிட்கோ தொழில்பேட்டை, காக்களுர், திருவள்ளூர் என்ற முகவரியில் அணுகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x