Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை ஆராதனை விழா

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை விழா நேற்று நடைபெற்றது.

உலக மக்களின் நன்மைைய கருதியும், இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்கள் பெருக வேண்டியும் மகா லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டியும் இந்த கோ பூஜை விழா நடத்தப்பட்டது. இந்தவிழாவின் தொடக்கமாக 27 நட்சத்திர கோயிலில் ராகு கேது, சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயகருக்கு 16 வகையான தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பசு மற்றும் கன்றுகளுக்கு குங்குமம், மஞ்சள், மாலைகள், வஸ்திரம் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகாட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x