சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்ஸோ சட்டத்தில் ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை   போக்ஸோ சட்டத்தில் ஒருவர் கைது
Updated on
1 min read

சூனாம்பேடு அடுத்த தேன்பாக்கம் பெரியாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்(38). அப்பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ள இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் பெற்றோர் இல்லாத, பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி ஒருவரிடம் ஜெகன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெகனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in