Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

வீடு புகுந்து ரூ.3 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் குலாளர் தெருவைச் சேர்ந்தவர் செல்வ ராஜ்(62). இவர் தேர்ப்பட்டியில் உள்ள தீப்பெட்டி நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணி யாற்றி வருகிறார். இவருக்கு சக்திவேல், ராகவன் என 2 மகன்கள் உள்ளனர்.முதல் மகனான சக்தி வேலுக்கு, வரும் 25-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் செல்வராஜ் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு குடும்பத்தார் அனைவரும் வழக்கம்போல் வீட்டில் உறங்கச் சென்றனர். காலையில் எழுந்து அறைக்கதவை திறக்க முயன்றபோது வெளிப்புறமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து வெளியில் வந்து பார்த்தபோது அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட் கள் சிதறிக் கிடந்தன. திருமண செலவுக்காக பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், இரண்டரை பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக செல்வராஜ் காவேரிப்பட்டணம் போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் விசாரணையில் மாடியில் இருந்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் இறங்கி பணம், நகையைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x