Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

நின்ற லாரி மீது சிலிண்டர் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார்(55) ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியில், சாலையில் பழுதான நிலையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதை, எரிவாயு சிலிண்டர் லாரி ஓட்டுநர் குமார் கவனிக்காத நிலையில் எதிர்பாராத விதமாக, நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் மற்றும் ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இணைந்து ஓட்டுநரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கிய லாரிகளையும் அகற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x