Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

விபத்தில் சிக்கிய வேனிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

சூளகிரி அருகே விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே உள்ள அட்டகுறிக்கி என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மினிலாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது. லேசான காயத்துடன், உயிர் தப்பிய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சங்கருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் லாரியை சோதனை செய்தார். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 25 பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது. குட்கா பொருட்கள் எங்கிருந்து, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது தெரிவில்லை. இதையடுத்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து, சூளகிரி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இது குறித்து சூளகிரி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, மினி லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை தேடி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x