Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

ஆன்லைன் குற்ற தடுப்பு விழிப்புணர்வு

திருப்பூர்

ஆன்லைன் குற்றங்களை தடுப்பது தொடர்பாக மாவட்டகுற்றப் பிரிவு போலீஸார் சார்பில், ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம், அலைபேசி கோபுரம் அமைப்பதால் அதிக லாபம் கிடைக்கும் என குறுந்தகவல் வருவது, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறுவது, அலைபேசி எண்ணுக்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளது, பரிசை பெற குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும் என அழைப்பு வருவது ஆகியவற்றை நம்பக்கூடாது. இதேபோல, வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட தகவலை அலைபேசியில் யாரிடமும்தெரிவிக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x