Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

இருளர் குடியிருப்பு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம் அடுத்த ஐந்துகாணி கிராமத்தில் பாலாற்றங்கரையோரம் உள்ள இருளர் குடியிருப்புப் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.

இதில், இருளர் மக்களுடன் பொங்கலிட்டு அப்பகுதி மக்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் எம்எல்ஏ தனபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலியபெருமாள், கிங் உசேன், கல்பாக்கம் காவல் ஆய்வாளர் சேதுபதி, வாசகர் வட்ட தலைவர் குமார், சமூக ஆர்வலர் செரீனா மற்றும் அனைத்து மதத்தினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் செவிலிமேடுஇருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் சமூக பாதுகாப்புதுறையின் சார்பில் பொங்கல்விழா நடைபெற்றது. இதில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மதியழகன்,குழந்தைகள் நலக் குழுமதலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் பொங்கல் பரிசுகளைஇருளர் மக்களுக்கு வழங்கினர். இதில் குழந்தைகள்நலக் குழும உறுப்பினர் சக்திவேல், குழந்தைகள் இல்லபாதுகாப்பு அலுவலர் யசோதரன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன்கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x