Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற காவல் துறையினர்.

வண்டலூர்: வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், நேற்று முன்தினம் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவப் பொங்கல் விழா, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதில் உறியடி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு காவல் துறை கூடுதல் இயக்குநர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் மாட்டு வண்டி, ஏர் கலப்பை, அம்மி, உரல் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. உயர் பயிற்சியக கூடுதல் இயக்குநர் பாஸ்கரன், துணை இயக்குநர்கள் ஏ.ஜெயலட்சுமி, செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் தற்போது துணை காவல் கண்காணிப்பாளார்களாக பயிற்சி பெற்றுவரும் 11-வது குழுவைச் சேர்ந்த 88 நபர்கள், பயிற்சி அளிக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x