Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பரமக்குடி இளைஞர்களிடம் ரூ.28.40 லட்சம் முறைகேடு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது கனி(35).

இவர் 2019-ல் ஆன்லைன் மூலம் கிடைத்த தகவலின்பேரில், ஹரியாணாவைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவரைத் தொடர்பு கொண்டார். ரஞ்சித்சிங் அயர்லாந்து நாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய செய்யது கனியும், அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து பல்வேறு தவணைகளில் ரூ.28.40 லட்சத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களை ரஞ்சித்சிங் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. பணத் தையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து கடந்த 12-ம் தேதி செய்யதுகனி உட்பட 7 பேர், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் ரஞ்சித் சிங் மீது மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x