Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்: அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கவில்லை. எனவே, சம்பளம் வழங்கக் கோரி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தினர் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x