Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல் மற்றும் உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரூர் கஸ்தூரிபாய் நகர்நல ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் நாளை மறுநாள் (ஜன.16) கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென திருச்சி மண்டல தடுப்பூசி மருந்து கிடங்கிலிருந்து 7,800 தடுப்பூசிகள் நேற்று கரூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தடுப்பூசி மருந்து கிடங்கில் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT