Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

காவல்துறை சார்பில் ரத்ததான முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.னிவாசன் தலைமை வகித்தார். ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன் முன்னிலை வகித்தார். முகாமில் காவல்துறையைச் சேர்ந்த 50 பேர் ரத்ததானம் செய்தனர். அரியலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் ரத்ததானம் பெற்றனர்.

ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுச்செல்வன், ராஜராஜன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x