Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

நடப்பு மாதத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசு தினம், 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும், மேற்குறிப்பிட்ட 3 நாட்கள் முழு நேரமும் மூடப்பட்டு விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x