Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தமுன்னுதாரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர் கள், அமைச்சர்களுக்கு முதற்கட்டத்திலேயே கரோனா தடுப்பூசி போடுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக முதல்வர் நாராய ணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளா கத்தில் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சுமார் 14 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.
பிரதமருடன் நடைபெற்ற முதல் வர்கள் கூட்டத்தில் மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் தடுப்பூசிக்கு என்ன உத்திரவாதம் உள்ளது? பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாதா? என கேள்வி எழுப்பினோம். அதற்கு, “அவசர காலம் என்பதால் மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர். பரீச் சார்த்த முறையில் சோதனை செய்யப்பட்டதால் அனுமதி தரப்பட்டது” என்று பிரதமர் கூறினார்.
முதல் கட்டமாக மருத்துவ பணி யாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக காவல்துறை, துப்பு ரவு பணியாளர்களுக்கும், மூன்றாவது கட்டத்தில் 50-வயதுக்கு மேற் பட்டோருக்கும், 4-வது கட்டமாக அனைத்து தரப்பினருக்கும் போடப் படும் என பிரதமர் தெரிவித்தார்.
மத்திய அரசு இலவசமாக கரோ னா தடுப்பூசியை அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசு முழுமையாக செலவை ஏற்றுக்கொண்டு, மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கவேண்டும். அச்சம் இருக்கக் கூடாது. மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளது.
இந்நிலையில் அரசியல் வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொள் வதில் முந்திக் கொள்ளக்கூடாது என பிரதமர் கூறியுள்ளார். ஆனால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதற்கட்டமாக தடுப்பூசியை போட்டு முன்னுதாரணமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன்.
ஏனாமுக்கு காக்கிநாடாவி லிருந்தும், மாஹேவுக்கு கோழிக் கோட்டிலிருந்தும் கரோனா தடுப் பூசி மருந்து தரக்கோரியதை மத்திய அரசு ஏற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT