Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
ஓசூர் மாநகர திமுக சார்பில் காமராஜ் நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா முன்னிலை வகித்தார்.
திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் தலைமை தாங்கி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு புதிய அடுப்புகளுடன், கரும்புகள் அணிவகுக்க புதுப்பானையில் பொங்கலிடப்பட்டது. இதில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய 3 மதங்களைச் சேர்ந்த மத பிரமுகர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டனர். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT