Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள மேலவரப்பன்குறிச்சி கிராமத்தில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நெருப்பில்லா சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் உழவன் எனும் தலைப்பிலும், தஞ்சை பாரத் கல்லூரி தாளாளர் புனிதா கணேசன் வள்ளுவம் காட்டும் உழவுத்தொழில் எனும் தலைப்பிலும் பேசினர். பாரம்பரிய உணவுகளை நெருப்பில்லாமல் தயாரிக்கும் முறைகள் குறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க. சண்முக சுந்தரம் பேசினார்.
தொடர்ந்து, மாப்பிள்ளை சம்பா, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி கொண்டு நெருப்பில்லாமல் மண்பானையில் கிராம மக்கள் பொங்கல் வைத்தனர்.
பின்னர், ஏர்கலப்பை மற்றும் காளைகளுக்கு மாலை அணிவித்து, படையலிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT