Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

மாஸ்டர் திரைப்படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர்கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா காலத்தையொட்டி திரையரங்குகள் இயங்காமல் இருந்தபோது எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்துசெய்வது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் நல்ல முடிவை அறிவிப்பார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட கட்டணம் தான் வாங்க வேண்டும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரையரங்குகளில் தட்கல் டிக்கெட் கட்டணம் எவ்வளவு நிர்ணயம் செய்யலாம் என திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்டுள்ளோம். இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அமல்படுத்தப்படும், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x