Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
நாகர்கோவில்/கோவில்பட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் வைத்து மாணவ, மாணவியர் பொங்கல் விழாவை கொண்டாடினர். கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவியர், கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்காலையிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவில்பட்டி
நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி கல்லூரியில் முதல்வர் சாந்தகுமாரி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பேராசிரியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மந்தித்தோப்பு கிராமத்தில் சமக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் பொதுமக்களுக்கு காய்கறிகள், கரும்பு, இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!