Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு பூஜைகளுடன் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா தொடங்கியது.
இன்று 16 வகை பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
நாகர்கோவில் நாகராஜா கோயில், மேலரதவீதி அரசடி மகா ராஜகணபதி கோயிலில் பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கொட்டாரம் ராமர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு 12 வகையான அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT