Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

இலங்கைக்கு கடத்த முயன்ற 5 டன் மஞ்சள் பறிமுதல்

நாகர்கோவில்

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே இரையுமன்துறை மீன் இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் மஞ்சள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நித்திரைவிளை போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். படகில் 200 சாக்கு மூட்டைகளில் 25 கிலோ வீதம் மஞ்சள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், விசாரணை நடத்தினர். அப்போது விசைப்படகு லட்சத்தீவைச் சேர்ந்த அன்வர் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இலங்கைக்கு மஞ்சளை கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x