Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

கால்நடை உறை விந்து குச்சி விநியோகம் தொடர்பாக தவறான பிரச்சாரம் திமுகவினருக்கு அமைச்சர் கண்டனம்

கால்நடைத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ கத்தில் கால்நடைத்துறை மூலம் உறை விந்துக் குச்சி ரூ.10-க்குவிநியோகம் செய்யப் படுகிறது. திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ரூ.2000-க்கு விற்பனை செய்வதாகதவறான தகவலை பரப்பி வருகிறார். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கால்நடை கிளை நிலையங்களிலும் கிடைக்கும். திமுகவினர் தவறான தகவலை மக்களிடையே பரப்பி வருவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் 1960-ல் ஏற்படுத்தப்பட்ட ‘தனுவாஸ்’ என்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் என்ற அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வரும்போது, தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு 2019- என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது? அமெரிக்கா சென்ற முதல்வர் அங்குள்ள தனியார் கரு உற்பத்தி மையத்தை பார்வையிட்டதன் அவசியம் என்ன? ஆத்தூரில் சிறப்பு மாட்டுப் பண்ணை என்ற பெயரில் 35 லிட்டர் பால்தரக்கூடிய மாடு வளர்ப்பு மையம்தொடங்கப்பட்டு உள்ளது.இது யாருக்காக தொடங்கப்பட்டுள் ளது? தற்போது தமிழகத்தில் புதிதாக செயல்படும் பன்னாட்டு நிறுவனம் உறை விந்து குச்சி ஒன்றை ரூ.2,000-க்கு விற்க திட்டமிட்டுள்ளது. இதனை பயன்படுத்தினால் கெடேரி (பெண்) கன்றுமட்டுமே பிறக்கும். காளை (ஆண்)கன்று பிறக்காது. இதை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி னால், 3 ஆண்டுகளுக்குப்பின் காளைகளே இருக்காது. அப்போது ஒரு உறை விந்து குச்சியின் விலை ரூ.2,000-க்குமேலும் இருக்கும்.இது தொடர்பாக தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதிக்க கால்நடைத் துறை அமைச்சர் தயாரா?’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x