Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

பாஜக கோட்ட நிர்வாகிகள் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணியின் கோட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடந்தது.

வடக்கு மாவட்ட தலைவர் அருண் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் பங்கேற்றார்.

பிப்ரவரி 6-ம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை பொதுமக்க ளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், வார்டுகள் தோறும் இளைஞர் அணி சார்பில் முகாம் நடத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x