Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வாணை (65). இவரது மகன் பழனிசாமி (45). நேற்று அதிகாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் - அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அனுப்பர்பாளையம்புதூர் அருகே அவிநாசி நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி, சாலையின் பக்கவாட்டில் இருந்த பல்பொருள் அங்காடியின் முகப்பு பகுதிக்குள் சாய்ந்தது.

இந்த விபத்தில் தெய்வாணை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட பழனிசாமி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து விசாரிக்கின்றனர்.

இதேபோல, திருப்பூரில் இருந்து சாத்தான்குளம் நோக்கி மாற்றுப் பேருந்தாக தனியார் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்றது. மாற்றுப் பேருந்து தேவைப்படாத நிலையில், அந்த ஆம்னி பேருந்து நேற்று அதிகாலை திருப்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது. திருப்பூர் -தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஊரக காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x