Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ஆர்.கே.நகர், கிண்டியில் அமைந்துள்ள மகளிர் அரசு ஐடிஐக்களில் ஜன.16 வரை மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தகவல்

சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கை ஜன.16 வரை நடைபெறுகிறது. 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆர்.கே.நகர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர், எண்.1 இருசப்பன் தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

விவரங்களுக்கு, முதல்வர்,அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆர்.கே. நகர், சென்னை-81 என்ற முகவரியில் அணுகலாம்.

கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல், ஆர்க்கிடெக்சுரல் டிராப்ட்ஸ்மேன்,பேஷன் டிசைனிங், தகவல்தொடர்பு தொழில்நுட்பம், எம்பிராய்டரி அண்ட் டிசைனிங், சர்பேஸ்ஆர்னமென்டேசன் டெக்னிக்ஸ் ஆகிய தொழிற்பிரிவுகளில் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதியுள்ள மாணவிகள் வரும் ஜன.16-ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-22501982 மற்றும் 9499055652 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x