5 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஹெக்டேர் கோயில் நிலங்கள் மீட்பு அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

5 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஹெக்டேர் கோயில் நிலங்கள் மீட்பு அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
Updated on
1 min read

கடந்த ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் ஹெக்டேர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் அலுவலக கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. ஆட்சியர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் 10 ஆயிரத்துக்கும் குறை வான கோயில்களே இருந்தன. தற் போது 40 ஆயிரம் கோயில்கள் உள் ளன. அனைத்துக் கோயில்களும் புனரமைப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏதுவாக, மண்டலங்கள் தனித் தனியாகப் பிரிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கண்டறிந்து, சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை மீட்டுள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் பரமசிவம் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் அனிதா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in