Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
மானாமதுரை ஒ.வெ.செ மேல் நிலைப் பள்ளியில் 1985-91-ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவரும் திரைப்பட நடிகருமான அய்யன்துரை தலைமை வகித்தார். வீரபாண்டி சேகர் வரவேற்றார்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட முன் னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் படித்தபோது ஆசிரி யர்களாக இருந்தவர்களைக் கவுர வித்தனர். பிறகு பழைய நிகழ்வு களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர். இந்திய மருத்துவக்கழக கிளைத் தலைவர் டாக்டர் செல்வராஜ், முன்னாள் மாணவர் சொக்கு ஆகியோர் பேசினர்.
மானாமதுரையின் அடையாள மான மண்பாத்திரத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT