Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வரும்முதல்வர், துணை முதல்வருக்கு வரவேற்பு

திருமங்கலத்தில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்துப் பேசியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கி வைக்க வருகிற 16-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிறார்கள். முதன்முறையாக அலங்காநல்லூர் விழாவுக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வரும் 30-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவுக்கு திருமங்கலம் வரவுள்ள முதல்வர், துணை முதல்வருக்கு 1 லட்சம் பேர் திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும். இதற்காக இப்போதிருந்தே சுவர் விளம்பரம் செய்து மக்களிடம் கோயில் திறப்பு விழா குறித்து பிரச்சாரம் செய்து அவர்களையும் விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அய்யப்பன், அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், மாணிக்கம், நீதிபதி, இளைஞரணி மாநில துணைச்செயலர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், ஜெ பேரவை மாவட்டச் செயலர் தமிழழகன், அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x