Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நிலுவை ஊதியம் வழங்கக் கோரி நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபாலபுரத்தில் சுப்பிரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் 1000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, கடந்த 26 மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளதை கண்டித்தும், விடுப்பு ஈட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் நேற்று ஆலை வளாகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் கோரிக்கையை ஏற்காவிடில் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அரவைப் பருவம் தொடங்கி விளைநிலங்களில் இருந்து தினமும் பல நூறு வாகனங்களில் ஆலைக்கு கரும்பு வந்த வண்ணம் உள்ளது. முன்னறிவிப்பின்றி தொழிலாளர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால், வெட்டப்பட்ட கரும்பு காய்ந்து, எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x