Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM
தூத்துக்குடி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் கிருபாகரன். முருக பக்தரான இவர் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இரண்டாவது பிரகாரத்தில் கோயில் கொண்டுள்ள சுவாமி வெங்கடாஜலபதிக்கு, வெள்ளி அங்கி காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தார்.
அதன்படி, ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 13,800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை திருச்செந்தூர் கோயிலில் வழங்கினார். இதனை, கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி பெற்றுக்கொண்டார். உள்துறை கண்காணிப்பாளர் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT