Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

மருதூர் அணையில் சிறுவன் மாயம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த 8 வயது சிறுவனை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது.

வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். தச்சுத் தொழிலாளி. இவர் தனது மகன்கள் பார்த்திபன் (8), கார்த்திக் (5) ஆகியோருடன், வெள்ளத்தை வேடிக்கை பார்க்க மருதூர் அணை பகுதிக்கு நேற்று மதியம் சென்றுள்ளார். தடுப்பணையை தாண்டி ஓடிய வெள்ளத்தில் அவர்கள் கால் நனைத்துள்ளனர். அப்போது, சிறுவன் பார்த்திபனை வெள்ளம் இழுத்துச் சென்றது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். முறப்பநாடு போலீஸார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள், இரவு 7 மணி வரை சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. வைகுண்Lம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் அங்கு முகாமிட்டு தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x