Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 29 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று வழங்கப்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் 29 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்புகளை இன்று வழங்கவுள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சி திருப்பத்தூர் ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 5 இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று (திங்கள்கிழமை) வழங்கப்படவுள்ளன. இதில், பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டைகளுடன் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT