Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM

சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

ஆம்பூர்  கயிலாயநாதர் சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்பூர்: ஆம்பூர் பள்ளித்தெருவில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷத்தை யொட்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளித்தெரு காந்தி நகர் பகுதியில் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி சமேத  கயிலாயநாதர் சிவன் கோயில் உள்ளது. இக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிவனடியார்கள் சார்பில், ‘திருவாசகம் முற்றோதல்’ நிகழ்ச்சி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x