மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த துரைக்குட்டி மகன் அஜித்குமார் (21). இவர், அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தில் தங்கி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தெருவிளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

சாமுண்டிபுரத்தில் நேற்று தெருவிளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.

உடன் பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக 15 வேலம் பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in