குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந் தார்.

குறிஞ்சிப்பாடி அருகே பாச்சாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், விவசாயி. இவரது மகன் ராம் (15). நெய்வேலி அருகே கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி யில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று அதே பகுதியில் இருந்த அவர்களது மாமரத்தில் ஏறி ஆட்டுக்கு தேவையான தழைகளை வெட்டியுள்ளார். அப்போது மாமரத்தின் கிளை முறிந்து அருகில் சென்ற மின்சார கம்பியில் விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி ஸ்ரீராம் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்தமருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வடலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in