சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை தருமபுரியில் சுகாதார திட்டங்கள் இணைச் செயலர் ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த, கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத் துறை இணைச் செயலர் டாக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அடுத்த படம்: ஈரோடு தனியார் மருத்துவமனையில் நடந்த கரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகையை ஆட்சியர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த, கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத் துறை இணைச் செயலர் டாக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அடுத்த படம்: ஈரோடு தனியார் மருத்துவமனையில் நடந்த கரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகையை ஆட்சியர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பூசி ஒத்திகை நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகர் நல மையம், கேர் 24 தனியார் மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. தடுப்பூசி செலுத்தப்படும்போது, பாதகமான நிகழ்வுகள் நடந்தால், அதைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவது இந்த ஒத்திகையின் நோக்கம்.

முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது, என்றார்.

இணையத்தில் பதிவேற்றம்

125 பேருக்கு தடுப்பூசி

விவரங்கள் கணினியில் பதிவு

இணை செயலர் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in