காஞ்சி மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

காஞ்சி மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. அதேபோல் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in