வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு நகராட்சி அலுவலகத்தில் பாமக மனு

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் மாநில துணைப் பொது செயலாளர் வெங்கடேஷ்வரன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அடுத்த படம்  : சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் மாநில துணைப் பொது செயலாளர் வெங்கடேஷ்வரன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அடுத்த படம் : சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Updated on
1 min read

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினர் நகராட்சி அலுவலகங் களில் மனு அளித்தனர்

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி தமிழகம் முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 5-ம் கட்டமாக நகராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை வகித்தார். இட ஒதுக்கீடு கோரும் மனுவை நகராட்சி அலுவலகத்தில் அளித் தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ., மேகநாதன், மாநில துணை அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

தருமபுரி

இதில், பாமக மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, முன்னாள் எம்பிக்கள் செந்தில், பாரிமோகன், முன்னாள் மாநில துணைப் பொது செயலாளர் சரவணன், வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

திருச்செங்கோடு

அண்ணாசிலை முதல் நகராட்சி வரை ஊர்வலமாகச் சென்று நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in