குஜராத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறதா? நாமக்கல்லில் ஒரேநாளில் முட்டை விலை 25 காசுகள் சரிவு

குஜராத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறதா? நாமக்கல்லில் ஒரேநாளில் முட்டை விலை 25 காசுகள் சரிவு
Updated on
1 min read

குஜராத்திலும் காகங்கள் இறந்த தையடுத்து அங்கும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதா என ஆய்வு நடந்து வருகிறது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக ஒரே நாளில் முட்டை விலை 25 காசு குறைந்துள்ளது. இதனால் நாமக் கல் பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் ஆலப்புழா, கோட்ட யம் மாவட்டங்களில் ஏராளமானவாத்துகள், கோழிகள் உயிரிழந் ததைத் தொடர்ந்து, மேற்கொள்ளப் பட்ட பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. பறவைக் காய்ச்சலைபேரிடராக கேரள அரசு அறிவித் துள்ளது. கேரளாவில் சுமார் 70 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட் டுள்ளன. அந்தப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங் களில் ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப் படும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன் படி, 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று கேரளா சென் றடைந்தனர். பறவைக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்து, தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை பார் வையிடுவதுடன் மாநில அரசு அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோ சனை நடத்த உள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஏராளமான பறவைகள் இறந்ததையடுத்து, அங்கு பறவைக் காய்ச்சல் பர வியிருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன.

ஹரியாணா மாநிலத்தில் 10 நாளில் 4 லட்சம் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவை பறவைக் காய்ச்ச லால் இறந்ததனவா என்பதை உறுதி செய்ய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களில் இருந்து கோழி களைக் கொண்டுவர மத்திய பிரதேச அரசு 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. ஒடிசா, உ.பி. மாநிலங்களில் இதுவரை பறவைக்காய்ச்சல் இல்லை என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளது. பறவைக் காய்ச்சல் பரவு வதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்ப ட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் மொதேரா கிராமத்தில் உள்ள சூரியன் கோயில் வளாகத்தில் 4 காக்கைகள் இறந்து கிடந்தன. இதற்கு பறவைக் காய்ச்சல் காரணமா என்று கண்டறிய அதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய் வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர் மாவட்டத்தில் சுமார் 150 காக்கைகளும் கர்நாடகாவின் தட்சிண் கன்னடா பகுதியில் 6 காகங்களும் இறந்துள்ளன. இவற்றின் மாதிரிகளும் பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

நுகர்வு குறைந்தது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in