சிவகங்கை பாதாள சாக்கடை அடைப்பை எடுக்க சென்னையில் இருந்து வந்த அதிநவீன இயந்திரம்

சிவகங்கை பாதாள சாக்கடை அடைப்பை எடுக்க சென்னையில் இருந்து வந்த அதிநவீன இயந்திரம்
Updated on
1 min read

சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை எடுக்கும் பணியில் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட உறிஞ்சும் அதிநவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சியில் ரூ.31.30 கோடியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைப் பணி, 2009-ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை.

27 வார்டுகளில் 5-ல் மட்டுமே திட்டம் செயல்படுகிறது. பயன் பாட்டுக்கு வராத மற்ற வார்டுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடி பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர்.

இதையறிந்த சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, தான் ஏற்கெனவே பணிபுரிந்த சென்னை மாநகராட்சியில் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள உறிஞ்சும் அதிநவீன இயந்திரத்தை வரவழைத்தார். இந்த இயந்திரம் பாதாள சாக்கடையில் இருந்து உடனுக்குடன் கல், மண் போன்ற அடைப்புகளை எடுத்து வெளியேற்றி வருகிறது.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சில வார்டுகளில் அவரவர் விருப்பம்போல வீடு களுககு பாதாள சாக்கடை இணைப்புக் கொடுத்துள்ளனர். பயன்பாட்டுக்கு வராத 22 வார்டுகளில் 60 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை நவீன இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம். இப்பணி முடிந்ததும் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in